Raththa Kottaikulle

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது
நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய்ச் சிலுவையில் பலியானார்
சாத்தானை வென்று விட்டார்
இம்மட்டும் உதவின எபனேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனைவிட
என் தேவன் பெரியவரே
தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்?
தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப்போல நடத்துகிறார்
அபிஷேகம் செய்கின்றார்
மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்த சேர்த்துக் கொண்டார்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.