முடிவில்லா நித்திய ஜீவனை
முடிவில்லாதவர் உனக்களிப்பார்
சத்திய பாதையில் அவருடன் நடந்தால்
நித்திய ஜீவனை நீ பெறுவாயே
கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை
சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்
கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி
நாதனை நிதம் துதி செய்திடுவாய்
பரமனின் பாதம் பற்றியே நடந்தால்
வரங்களின் ஆசீர் அளித்திடுவார்
கரங்களினால் உன்னை அணைத்திடுத்தே
பரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார்