கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில் மந்தைகள்
நடுவினில் நெருங்கவும் முடியாது
இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில் தீபமாய்
இலங்கிடும் கர்த்தரால் இசை வளரும்
தேவனின் இராஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையாய் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை
பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரைபடமாயுள்ள யாரையும் அணுகாது