Kartharin Kai

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசித்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவார்
கிருபையிலே வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம்
திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்த்
தம்முடன் சேர்த்துக்கொள்வார்
மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.