Karaiyora Kadalalai

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
கரையோர கடலலை சத்தம்
காதோர காத்துல நித்தம்
சொல்லுது ஒரு அற்புத
செய்தி மெய்யான செய்தி..
சொல்லுது ஒரு அற்புத
செய்தி மெய்யான செய்தி..
வருஷமு இரண்டாயிரமுமாச்சி
அடங்கல அவியல இந்த பேச்சி
வருஷமு இரண்டாயிரமுமாச்சி
அடங்கல அவியல இந்த பேச்சி
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை
இருக்குதென்ற ராசாவே
மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை
இருக்குதென்ற ராசாவே
கரையோர கடலலை சத்தம்
காதோர காத்துல நித்தம்
கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு
குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு
குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு
பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி - இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி
உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி
கரையோர கடலலை சத்தம்
காதோர காத்துல நித்தம்
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க
சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க
சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க
வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன்
உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன்
கரையோர கடலலை சத்தம்
காதோர காத்துல நித்தம்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.