Iththarai Maanthare

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
இத்தரை மாந்தரே நித்திரை தெளிவீர்
இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர்
இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்
யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர்
பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று
இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று
மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது
முடிவு காலத்தில் நீ சேவை செய்திட
பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது
வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது
தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட
அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட
யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது
பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது
சத்திய வசனமோ எங்குமே கேட்குது
நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.