Enthan Naavil

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்
பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத் தேற்றினார்
வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்
சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்
தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்
இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.