Aananthamai Inba

Album: Christian

Music:

Lyricist:

← Back to Album
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன்
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்?
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லால் ஆசை இப்ப+வில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே
உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்த்திட வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம் கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை
தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
ஆற்றிடுதே உந்தன் சமூகமே
பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்

Advertisement

Ad content goes here.

© 2024 Thamizh Songs Lyric. All rights reserved.